இப்படியே போனா வேலைக்கு ஆகாது., ஒப்பாரி வைத்த துரைமுருகன் மகன் துரை ஆனந்த்.! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பல்வேறு அரசியல் கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய -மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உயர்வுக்கு எதிராக திமுகவினர் புதுவிதமான ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக வேலூர் மாவட்டத்தில் திமுகவினர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஒப்பாரி ஆர்ப்பாட்டத்தில், அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளிலும் திமுகவினர் இந்த ஒப்பாரி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DURAIMURUGAN SON PROTEST


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->