இப்படியே போனா வேலைக்கு ஆகாது., ஒப்பாரி வைத்த துரைமுருகன் மகன் துரை ஆனந்த்.!
DURAIMURUGAN SON PROTEST
தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பல்வேறு அரசியல் கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய -மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உயர்வுக்கு எதிராக திமுகவினர் புதுவிதமான ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக வேலூர் மாவட்டத்தில் திமுகவினர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஒப்பாரி ஆர்ப்பாட்டத்தில், அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளிலும் திமுகவினர் இந்த ஒப்பாரி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.