வைகோ மற்றும் திருமாவை பங்கப்படுத்திய துரைமுருகன்! அமைதியாக துடைத்துக்கொண்ட அவலம்!!
duraimurugan says vaiko and thiruma
திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு, சட்டசபை மற்றும் பொதுக்குழுவாக இருந்தாலும் சரி யோசிக்காமல் நக்கலடித்து பேசுவது வழக்கம்.
இதைப் போலவே சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் நக்கலடித்து பேசியுள்ளார். அது என்னவென்று பார்த்தால், நம்ம கட்சி தலைவரும் ஸ்டாலினை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு நமது தயவால் எம்பி ஆகியுள்ளனர்.
இதற்கு ஸ்டாலின் சாமர்த்தியம் தான் காரணம் என கூறி உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணி என தனி அணியை அமைத்து போட்டியிட வைகோ மற்றும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினரை துரைமுருகன் நக்கலடித்து பேசுகிறார்.
இதைக் கேள்விப்பட்ட வைகோவும், திருமாவளவனும் கூட்டணி கட்சி என்றும் பாராமல் இப்படி அசிங்க படுத்தி விட்டார் என வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏன் என்று விளக்கம் கேட்டாலே கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுவிடுவார்கள் என நினைத்து இருவரும் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர்.
English Summary
duraimurugan says vaiko and thiruma