துரைமுருகனுக்கு 24, டி.ஆர்.பாலுவுக்கு 16 திமுகவில் புதிய சர்ச்சை! துறையால் டி.ஆர்.பாலுவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
durai murugan shock to trbalu problem in dmk
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் எதிர்பார்த்த படி நடந்து முடிந்துள்ளது. திமுகவில் பொருளாளர் பதவிவகித்து வந்த துரைமுருகன்,நேற்று பொதுச்செயலாளர் போட்டியில் எதிர்வேட்பாளர் இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனைப்போன்று டி.ஆர் பாலுவும் எதிர்வேட்பாளர் இல்லாமல் ஒருமனதாக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
துரைமுருகன் மற்றும் டி.ஆர் பாலுவுக்கும் திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் பலத்த வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனும் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது பயம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். இறுதியில் கலகலப்பாக பேசியிருந்தார்.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் டி.ஆர் பாலுவுக்கு ஆதரவாக எத்தனை பேர் மனுதாக்கல் செய்தார்கள் என்பது கட்சிக்குள் விவாதமாகி வருகிறது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட துரைமுருகன் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது ஆதரவாளர்கள் 23 மனுக்களை அவருக்காக தாக்கல் செய்தனர்.
மேலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது ஆதரவாளர்கள் 16 மனுக்களை அவருக்காக தாக்கல் செய்தனர்.
திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழு கூட்டத்தில் வெளியாகும். தற்போது துரைமுருகனுக்கு மட்டும் அதிக வேட்புமனு வந்திருப்பது திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைமுருகனுக்கு இணையாக டி.ஆர்.பாலுவுக்கு அவரது ஆதரவாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்ற சர்ச்சை திமுகவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
English Summary
durai murugan shock to trbalu problem in dmk