நம்மைக் காக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்போம்: மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


நம்மைக் காக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்போம் என, அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வகுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட  நாளான இந்திய அரசியலமைப்புச் சட்ட நாளில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்தியாவில் அனைத்தையும் விட உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம் தான்... இந்தியாவை இயக்குவது  அரசியலமைப்புச் சட்டம் தான்... இறையாண்மை அளிப்பதும் அரசியலமைப்புச் சட்டம் தான்.

அத்தகைய சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம்... இந்தியாவை உயர்த்துவோம்!" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss wish Constitution Day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->