அவனை., தாயே தடுத்தாலும் விடாதே - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் "தமிழ் இல்லாத தமிழ்நாடும், கல்வியும்" என்ற தலைப்பில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் இல்லாத தமிழ்நாடும், கல்வியும்:
பாரதிதாசன் பார்த்தால் எப்படி கொதிப்பார்?

தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை என்று
ஏற்கனவே ஏங்கினார் பாரதிதாசன்
ஆனால், இப்போதோ தமிழகத்தின்
பள்ளிகளில் கூட தமிழைக் காணவில்லை;
எங்கும் ஆங்கிலம் தான் அதிகாரம் செய்கிறது!
ஆங்கிலத்தில் படித்தால் தான் சீமான்
என்ற பொய்யான விஷவிதை பிள்ளைகள்
மனதிலும் பெற்றோர் மனதிலும் விதைக்கப்படுகிறது!
பள்ளியில் மட்டுமல்ல.... அரசு அலுவலகங்கள்,  
சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள், உணவகங்கள்
உள்ளிட்ட எங்கேயும் என் தாய்மொழியைக் காணவில்லை
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ்
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று முழங்கிய பாரதிதாசன்,
இப்போது தமிழில்லாத தமிழகத்தைக் கண்டு எப்படிக் கொதிப்பார்?
தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே.
தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே என்ற பாவேந்தர்,
தமிழை புறக்கணித்தவனையும் விடாமல் தண்டிப்பார் என்பது உறுதி!."

இவ்வாறு அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss say about tamil language important


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->