செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் விஜயலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பொதுவாழ்க்கையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகைகளிலும் துணை நின்றவர் திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்கள். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது அவரது வீட்டுச் சென்ற போது இதை நேரில் அனுபவித்தேன். அம்மையாரின் மறைவு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

திருமதி விஜயலட்சுமி அம்மையார் அவர்களை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss mourning to ops wife dead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->