தமிழக அரசியல் களத்தின் மூத்த தலைவர் திடீர் மரணம்., வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் அ. சக்திதாசன் மறைவுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

"இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அ. சக்திதாசன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தலித் இயக்கங்களின் பண்பட்ட தலைவர்களில் ஒருவரான சக்திதாசன் ஒடுக்கப்பட்ட மக்களின்  முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்டவர். அதற்காக பல்வேறு போராட்டங்களை  நடத்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட  மக்களின் ஒற்றுமைக்காக என்னுடன் இணைந்து பணியாற்றியவர். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அறிஞர் அண்ணா உள்ளிட்ட தமிழ்நாட்டு தலைவர்களுடனும், தேசிய அளவிலான தலித் தலைவர்களுடனும் நட்பு கொண்டிருந்தவர் அ. சக்திதாசன் ஆவார்.

சக்திதாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் அந்த இரங்கல் செய்தியில் தெரிவிப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss mourning to a sakithidhasan death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->