முக ஸ்டாலின் அந்த கனவு பலிக்காது - இராமதாஸ் பகீர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தருமபுரி பிரச்சாரத்தில், முக ஸ்டாலினின் நாற்காலி கனவு பலிக்க போவதில்லை'' என்று பேசியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி, வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று 7 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, தமிழகம் முழுவதும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று, சேலம் மேச்சேரி, கொளத்தூர் பகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசிய இராமதாஸ், ''இந்த மக்களவை தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும். அதனை அதிமுக தலைமையில் அமைந்துள்ள இந்த மெகா கூட்டணி ஏற்படுத்தும்'' தெரிவித்தார்.

இதனையடுத்து, தருமபுரி மக்களவை பாமக வேட்பாளர் அன்புமணி இராமதாசை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய இராமதாஸ், ''கடந்த மக்களவை தேர்தலில் திமுக கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை, அதே நிலைதான் தற்போதும் வரப்போகிறது. ஆட்சியை கலைத்து திமுக தலைவர் முதல்வர் நாற்காலி ஏறலாம் என்ற அவரின் கனவு பலிக்காது'' என்று பிரச்சாரத்தின் போது மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss election campaign in DHARMAPURI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->