எல்லா நாளும் அன்னையரை போற்றுவோம்.! அன்புமணி இராமதாஸ் அன்னையர் தின வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில், 

"உலகில் அனைத்துக்கும் ஆதாரம் அன்னை தான். நம்மை இந்த உலகிற்கு தந்தவர்கள் அன்னையர் தான்.  அதனால் தான்  நாம் பேசும் மொழி, நாம் வாழும் நாடு ஆகியவற்றை தாய்மொழி, தாய்நாடு என அழைக்கிறோம். 

அன்னையின் கடனை அடைக்க முடியாது. அன்னையர் நாளான இன்று மட்டுமின்றி எல்லா நாளும் அன்னையரை போற்றுவோம்" என்று தெரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss wish mothers day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->