#சற்றுமுன் : பள்ளி மாணவியின் தற்கொலை கடிதம்., அன்புமணி இராமதாஸ் கடும் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தொடரும் பாலியல் வன்கொடுமைகள்... தற்கொலைகள் : தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர்  அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னையை அடுத்த மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. 

அந்த மாணவி  எழுதி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ள கருத்துகள் சமூகத்தின் மனசாட்சியை குத்திக் கிழிக்கின்றன.

கோவை, கரூர், சென்னை என பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.  இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது.  பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும்  மாணவிகள் உட்பட எந்த பெண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடாது; தற்கொலைகள் கூடாது என்ற நிலையை உருவாக்க  தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Mangadu School Girl Suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->