அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும்., மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். வாக்கு செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரித்ததாவது,

"கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு, பெண்களை சீண்டுதல் மீண்டும் தலை தூக்க கூடாது. தமிழகம் தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதே நிலை தொடர வேண்டும்.

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதேபோல் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், பெண்கள் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த நிலை தொடர வேண்டும், தமிழகம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்து திணிப்புதான். கருத்துக் கணிப்பு என்பதே தவறான ஒரு முன்னுதாரணம். தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் கருத்துகணிப்பு வெளியிட கூடாது. 

தமிழ்நாட்டில் 6 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 234 சட்டமன்ற தொகுதிகள். இவர்கள் மொத்தத்தில் 30,000 பேரை கருத்து கேட்டு விட்டு, சராசரியாக ஒரு சட்டமன்ற தொகுதிகள் மூன்று லட்சம் வாக்காளர்களில் 130 பேரிடம் கருத்து கேட்டு விட்டு தமிழக மக்களின் மனநிலை இது தான் என்று சொல்வதா?

இவர்களின் கருது கணிப்புகளில் நகரத்தில், கிராமத்தில், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்களை, நெசவாளர்களை அரசு ஊழியர்களை, முன்னேறி உள்ளார்களா, பின்தங்கிய மக்களை என்று தகவலும் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மனநிலையில் மக்கள் இருப்பார்கள்.

ஆனால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நூறு பேரிடம் கருத்து கேட்டுவிட்டு, இதுதான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மனநிலை என்று சொல்வதெல்லாம் அறிவியல் பூர்வமாக கிடையாது., விஞ்ஞான பூர்வமாக கிடையாது. 

அவர்களுக்கு யார் வெற்றி பெற வேண்டுமோ அவர்களை அவர்களுக்காக  கருத்துகணிப்பு வெளியிடு வார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் ஊடகம் வைத்து உள்ளார்கள். அவர்களுக்கு ஏற்றார் போல் கருத்துக் கணிப்புகளும், கருத்துத் திணிப்புகளும் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் ஒரு சதவீத மக்களிடம் கருத்து கேட்டு விட்டு., இதுதான் கருத்துக்கணிப்பு என்று சொல்வதா? கடந்த 2001 சட்டமன்றத் தேர்தல் முதல் இன்று வரை எந்த ஒரு கருத்துக் கணிப்பும் சரியாக வந்ததாக வரலாறு இல்லை. இது கருத்துக்கணிப்பு கிடையாது கருத்து திணிப்பு.

ஆகவே, இது அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக எங்களுடைய அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழகம் அமைதியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு அமைதியாக உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு உள்ளது. எல்லாரும் எல்லா வகையான மக்கள் அனைவரும் நலமாக உள்ளனர்."என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani press meet voting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->