ஆட்டத்தை துவங்கிய உதயநிதி.! வெளியானது அடுத்த அதிரடி அறிவிப்பு.!
dmk youth wing meeting
கடந்த ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன் பின்னர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை ஜூலை 6ஆம் தேதி முதன்முறையாக தனது தலைமையில் நடத்தினார்.
அதன் பின்னர், தமிழகம் முழுதும் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான, ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளைஞரணியில் இடம்பெற்றுள்ள சில மாநில நிர்வாகிகளை மாற்றியமைக்க போவதாக உதயநிதி கூறியிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இளைஞர் அணியின் மாநில பொறுப்பில் இருப்பவர்கள் உதயநிதி ஸ்டாலினை விட வயதில் மூத்தவர்களாக இருக்கின்றனர். இளைஞர் அணியில் மூத்தவர்கள் இருக்கும் பட்சத்தில் உதய நிதியின் கீழ் செயல்பட வேண்டி இருக்கும். இது உதயநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என உதயநிதி புது திட்டங்களை தீட்டி வருகின்றார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் நடைபெறும்.
இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். இதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என அவர் கூறியுள்ளார்.