நான் ஆளுங்கட்சி திமுக டா., கோடிக்கணக்கில் ஆட்டையய் போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது.! - Seithipunal
Seithipunal


பல கோடி ரூபாயை ஏமாற்றிய வழக்கில் புதுக்கோட்டை அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி இவர் மோசடி செய்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலையில் சேர்த்து விடுவதாக கூறி, பல நபர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்து உள்ள ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராஜமாணிக்கம் திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ராஜமாணிக்கம் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை இருப்பதாக கூறி, பல நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், பணத்தை திருப்பி கேட்டால், "நான் ஆளுங்கட்சி டா, உன்னால் என்னை ஒன்னும் செய்ய முடியாது" என்றும் மிரட்டியதாவும் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜமாணிக்கத்தை கைது செய்து, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VIP ARREST IN THIRUMAYAM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->