ஸ்டாலினின் பிளானை கெடுக்கும், வீரமணி.?! அப்செட்டில் திமுக மூத்த தலைவர்.!
dmk upset about veeramani
ரஜினி துக்ளக் விழாவில் பேசியதை பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால் கூட இந்த அளவுக்குப் பிரச்சனை பெரிதாக இருக்காது. இருப்பினும், திகவினர் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் திமுகவிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது
சமீபத்தில் திக தலைவர் வீரமணி ’ராமர் படத்தை 1971 ஆம் ஆண்டு செருப்பால் அடித்ததால் தான் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைத்து ஆட்சியை பிடித்தது’ என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
வீரமணியின் இந்த பேச்சு இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த கொந்தளிப்பின் வெளிப்பாடாக வரும் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து துக்ளக்கின் லேட்டஸ்ட் இதழில் ‘ இப்போது திக தான் காங்கிரசை விட நமக்கு பெரும் தலைவலியாக இருப்பனர் போல என்று துரைமுருகன் முக ஸ்டாலினிடம் சொல்வது போல ஒரு அட்டைப்படத்தை போட்டு இருக்கின்றது. இந்த அட்டை படத்தினால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
English Summary
dmk upset about veeramani