#BigBreaking | திமுக அறிவாலயத்தில் பதற்றம் - வெடித்தது உட்கட்சி பூசல் - போலீசார் குவிப்பு! - Seithipunal
Seithipunal


தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மனு அளித்துள்ள செல்லத்துரைக்கு ஆதரவாக, திமுகவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட தகவலின்படி, செல்லத்துரைக்கு பதிலாக தனுஷ் குமார் எம் பி-யை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் இந்த ஆர்ப்பாட்டம் என்று தெரிகிறது. 

தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது இருந்து வருபவர் செல்லதுரை. இவர் கடந்த 22 ஆம் தேதி தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளருக்கு உண்டான மனு தாக்கல் செய்துள்ளார். இந்த பதவிக்கு எம்பியாக இருக்கக்கூடிய தனுஷ் குமாரும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு தனுஷ் குமாரை கட்சியின் தலைமை அறிவிக்கப் போவதாக செல்ல துறை ஆதரவாளர்களுக்கு தகவல் கிடைத்து.

இதனை எடுத்து இன்று காலை திமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த செல்லதுறை மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபர்களிடம், திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கக்கூடிய பூச்சி முருகன் உள்ளிட்டவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Thenkasi District Secretary post issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->