ஆட்சியை கைப்பற்ற திமுக போட்ட பிளான்.. வெளியான அறிவிப்பு.! தீயாக வேலை செய்யும் நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. கொரோனா காலத்தில் இருந்த காணொளி காட்சிகள் மூலமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் என பல்வேறு தேர்தல் பணிகள் கடந்த 4 மாதமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்டத் திமுக பொருளாளர் தங்கத்தமிழ்செல்வன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர்கள் சேர்ப்பு, தகுதியில்லாதவர்கள் நீக்குவது ஆகிய பணிகளை சிறப்பாக செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

முதலில் வருபவர்களுக்கு ஒரு சவரன் தங்கம், இரண்டாவது வருபவர்களுக்கு அரை சவரன், மூன்றாவது வருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தங்கதமிழ்செல்வனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணன் குமாரும் பரிசு அறிவித்துள்ளார். மூன்றாவதாக போடி ஒன்றிய செயலாளர் பரிசு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் திமுகவினர் தீயாக வேலை செய்ய தொடங்கியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk thanga tamilselvan new plan for 2021 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->