கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுகவின் கூட்டணி கட்சி!! தமிழக அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்!!
dmk support to kamal
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், "நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிகபடியான வெற்றி பெறும்.
இதன் மூலம் தமிழக அரசியலில் எதிர்பாராத அளவிற்கான மாற்றம் ஏற்படப் போகின்றது. மத்தியில் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என நான் கருதுகிறேன். கமல்ஹாசன் கூறியதில் என்ன தவறு உள்ளது?
கோட்சே பற்றி அவர் கூறியிருப்பது தவறானதா? காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொன்று கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என இந்துமகாசபை தலைவி கூறியபோது யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?
கமலஹாசன் கூறியது சரித்திர உண்மை. கமல்ஹாசன் மீது முட்டை வீசியது, செருப்பு வீசியது இதெல்லாம் அக்கிரமமாக தெரியவில்லையா? இதனை ஏன் பாஜக தலைமை கண்டிக்கவில்லை? கோட்சேவை கொடியவன் என்று கூறியவரை நடமாட விடக்கூடாது நாக்கை இருப்பேன் என பேசுவது, ஆட்களை அனுப்பி கூட்டத்தில் செருப்பு வீச செய்வது எல்லாம் மிகவும் கீழ்த்தரமான, அநாகரிகமான அரசியல்.
இது ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடும். இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.