திடீர் மாரடைப்பு! இளம் வயதிலே மரணத்தை தழுவிய திமுக மாநில நிர்வாகி! சோகத்தில் திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


திமுக மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் ஈரோடு பி.ஆர்.எஸ்.ரங்கசாமி மாரடைப்பால் அகால மரணமடைந்தார். 

அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன், "என் நண்பரும் மாநில மாணவர் அணி துணைச் செயலாளருமான B.R.S. ரங்கசாமி இன்று 18.8.2020 பகல் 1.40 மணியளவில் மாரடைப்பால் உயிர் இழந்தார். 

இந்த இளவயதில் அவருக்கு ஏற்பட்ட இந்த மரணம் என் நெஞ்சில் இடியாய் இறங்கியது. அன்புடன் இனிமேல் யாரை நான் பி.ஆர்.எஸ் என்று அழைப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. காலம் கொரானா வடிவில் வந்து என் அருமை நண்பனை காவு வாங்கி விட்டது

திமுக மாணவர் அணியை இந்தியாவிலேயே சிறந்த மாணவர் அணியாக உருவாக்கிக் காட்டுவோம்! தமிழக மக்களின் துயர் துடைக்க, கழகத் தலைவர் தளபதியாரை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர வைப்போம் என்று உன்மேல் உறுதியெடுக்கிறோம் என் நண்பா! நீ ஒய்வெடு, நாங்கள் போராடுகிறோம்! என தெரிவித்துள்ளார். 

அதேபோல திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவிக்கையில், "கழக மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் ஈரோடு பி.ஆர்.எஸ்.ரங்கசாமி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு கலங்கிப்போனேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK students wing PRS Rangasamy passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->