திடீரென போராட்டத்தை அறிவித்த திமுக .! 8 மாவட்டங்களை தேர்வு செய்த ஸ்டாலின்.!
dmk protest for hydrocarbon
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு அறிவித்துள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மீனவ மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் வரும் 27ம் தேதி முதல் காவிரிப்படுகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக, வருகிற 28ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக சார்பில் வருகிற 28ந் தேதி திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மொத்தம் 8 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்டார்.
English Summary
dmk protest for hydrocarbon