யார் அந்த நாய்..? தூக்கி அவனை வெளியே போடுங்கள்" முரட்டு திமுக உபி..யை வச்சு செய்த ஆ.ராசா..! மன உளைச்சலில் உபி..க்கள்..!
dmk mp rasa angry speech in protest
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக சார்பில் நேற்று மாவட்டம் தோறும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுகவின் தோழமை கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
அந்த வகையில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ,ராசா பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ,கலைஞர் வாழ்க, என திமுக தொண்டர் ஒருவர் முழக்கமிட்டார். இது ஆ.ராசாவின் பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது, இதனால் கோபம் அடைந்து எரிச்சலடைந்த ஆ,ராசா அந்த திமுக தொண்டரை பார்த்து, "யார் அந்த நாய்..? அவனை
தூக்கி வெளியே போடுங்கள்" என மேடையிலையே ஆவேசமாக கத்தினார்.
திமுக தொண்டரை பார்த்து 'அந்த நாயை தூக்கி வெளியே போடுங்கள்' என திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ,ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் வாழ்க, என முழக்கமிட்ட முரட்டு திமுக உடன் பிறப்பை நாயே என திமுக துணை பொதுச்செயலாளர் சாடி இருப்பது பெரம்பலூர் உபி..க்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
English Summary
dmk mp rasa angry speech in protest