#BigBreaking | அப்பாவியை அடித்து கொலை செய்த வழக்கில் சற்றுமுன் திமுக எம்பி., ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ்-க்கு சொந்தமான முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றிய மேல் மாம்பட்டை கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்தப் படுகொலைக்கு காரணம் திமுக எம்பி ரமேஷ் மற்றும் சிலர் கோவிந்தராசுவை தாக்கியது தான் என்று, அந்த ஆலை ஊழியர்களும், கோவிந்தராசுவின் உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கோவிந்தராசு அவர்களின் மகன் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.

அதில், "நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, அவரின் உடலில் ரத்த காயங்கள், அடித்து துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே எனது தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தர வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக 5 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ்.,வின் பிரேத பரிசோதனையில், அவரின் பின் மண்டை உடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும், திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆளும் திமுக அரசுக்கு பயந்து, அவரை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், சற்றுமுன் திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp ramesh surrender to court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->