இரண்டாவதாக ஒரு திமுக எம்பி.,யின் மீது அடிதடி வழக்கு பதிவு.!  - Seithipunal
Seithipunal


முந்திரி ஆலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில், காவல்கிணறு பகுதியில் பாஜக பிரமுகர் தாக்கியதாக நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் ஆவரைகுளம் பாஸ்கரன் மீது திமுக எம்பி ஞானதிரவியம் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட பொன் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக பிரமுகர் ஆவரைகுளம் பாஸ்கரன் மீது தாக்குதல் நடத்தியதாக நெல்லை எம்பி ஞானதிரவியம் திரவியம் மீது, பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஞானதிரவியம் அவரின் மகன்கள் சேவியர் ராஜா, தினகர் மற்றும் திமுகவை சேர்ந்த 30 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக எம்பி.,க்கள் இப்படி அடிதடி, கொலை வழக்குகளில் சிக்குவது, திமுகனர் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவருவதாக பொதுமக்கள் மத்தியில் என்ன தோன்றியுள்ளியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP GNANATHIRAVIYAM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->