#வீடியோ: திமுகவின் வேற லெவல் ரவுடிசம்.!! அடேங்கேப்பா.. போலீஸுக்கே இந்த நிலைமையா.!!
DMK MLA VIDEO
தமிழக மக்களுக்கு திமுக என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரவுடிசம் தான். கடந்த கலாம் என்று சொல்ல கூட வாய்ப்பு கொடுக்காமல், தொடர்ந்து தங்களது ரவுடிசத்தை எளிய மக்களிடமும், பெண்கள் மீதும் காண்பித்து வருகின்றனர்.
பஜ்ஜி கடை, பியூட்டி பார்லர், செல்லுக்கடை, பிரியாணி கடை என்று வணிகர்கள் திமுகவினருக்கு ஓசியில் கொடுக்கவில்லை என்று கொடூரமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் இணையத்தில் இன்றும் வைரலாகி வருகின்றன.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் திமுகவினர் செய்த ரவுடிசத்தின் காணொளிகள் அதிகம் வெளியாகி, பின்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின், அவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தற்காலிக நீக்கம் செய்து பூரிப்பு அடைகிறார். இன்னும் சொல்ல போனால் தற்காலிக நீக்கம் செய்வதையே கடந்த ஒரு வருடமாக ஸ்டாலின் செய்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
திமுகவின் முக்கிய எதிரி CCTV கேமரா தான் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் CCTV கேமராவை ஒழிப்போம் என்ற கோப்பில் தான் முதல் கையெழுத்தாக ஸ்டாலின் இட வேண்டும் என்று நெட்டிசன்கள் திமுகவினரை கடுமையாக விமார்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுகவின் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், போலீஸ் அதிகாரிகளை பார்த்து, ''போயா அங்கிட்டு.. என்னய்யா..? என்னய்யா..? உன்னால் என்ன செய்ய முடியும்.. உன்னால் என்ன செய்ய முடியும்..'' என்று தாக்குவது போல் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், இவர்கள் ஆட்சியில் இல்லாதபோதே போலீசுக்கு இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.