முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுக எம்.எல்.ஏ திட்டம்.! கலக்கத்தில் திமுகவினர்.!!
dmk mla meet tn cm
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
குறிப்பாக, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியபின், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா கோரிக்கை மனு அளித்துள்ளார். திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா எதற்காக முதலமைச்சரை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளிவரவில்லை.