முதல் நாளே இப்படியா?! திமுக எம்.எல்.ஏ.,க்கள் செய்த வேலை!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. 

இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு கருதி முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம் எல் ஏக்களும் முக கவசம் அணிந்து இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று உள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிரான முக கவசங்களை அணிந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்க் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு  வரும் போதே, சமூக இடைவெளி இல்லாமல் ஒருவரை ஒருவர் உரசி கொண்டு கூட்டமாக வந்தது, பொறுப்பற்ற செயலாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla break the corona rule


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->