திமுகவின் முக்கிய நிர்வாகி வெட்டி கொலை! விழுப்புரத்தில் பரபரப்பு!!
dmk member murder in viluppuram
விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் பாலாஜி. இவர் திமுகவின் வட்ட செயலாளர் பதவி வகித்து வந்தார். நேற்று இரவு திருச்சி - சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த கால்வாயில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது.
அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கால்வாயில் கிடந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டனர். அதனை பிறகு அது திமுக வட்ட செயலாளர் பாலாஜி என தெரியவந்தது. அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திமுக பிரமுகர் பாலாஜி, முன் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
dmk member murder in viluppuram