அவசர ஆலோசனையில் திமுக.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர்களின் நேர்காணல் என பிஸியாக இருந்து வருகிறார். 

இதனிடையே திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்னும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கிறது. இதனால் திமுக கூட்டணி சிதறிய மூன்றாவது அணியில் சேருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 9 மணி அளவில் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கடந்து கொண்டுள்ளனர். வரும் 7ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ள நிலையில், இது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்துகின்றனர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk meeting start in online


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->