சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முக்கிய நபரை சந்திக்கப்போகும் துரைமுருகன்.! அதிர்ச்சியில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 16வது சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் மீது திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஊழல் புகார்களை கூறி வருகிறார். கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது ஆளுநரிடம் திமுக 97 பக்கம் ஊழல் புகார்களை கொடுத்துள்ளது. தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் திமுக அளித்தது. 

இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்திக்கிறார், அமைச்சர்கள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி நிலையில், இரண்டாம் கட்ட பட்டியலை ஆளுநரிடம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு புகார் பட்டியலை அளிக்கிறது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk leader duraimurugan meet governor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->