#BREAKING | அடுத்த தலைவர் யார்?! திமுகவினர் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானது!
DMK Head Election 9 oct 2022
திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புகள் மத்தியில் எகிறியுள்ளது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சற்றுமுன் விடுத்துள்ள அறிவிப்பில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலவர் மு.க.ஸ்டாலினே மீண்டும் திமுக.,வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சமூகநீதியை நிலைநாட்டவும், வாரிசு அரசியல் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியாக பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
DMK Head Election 9 oct 2022