திமுகவின் முன்னாள் எம்பி மரணம்.. சோகத்தில் திமுகவினர்.!
dmk former mp death
திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி சென்னையில் காலமானார் அவருக்கு வயது 57
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்த வசந்தி ஸ்டான்லி எழுத்தாளர் பத்திரிகையாளர் என பன்முகத் திறமை உடையவராகத் திகழ்ந்தார் கடந்த 2008-ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகினார் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழக சிறுபான்மையினர் நல ஆணையம் உள்ளிட்ட மத்திய - மாநில அரசுகளின் ஆணையங்களில் பதவிகளை வகித்தவர் வசந்தி ஸ்டான்லி
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வசந்தி ஸ்டான்லியின் உயிர் பிரிந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக, வசந்தி ஸ்டான்லியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று மாலையில் இறுதிச்சடங்குக்காக அவரது உடல் பாளையங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது இவருடைய மரணம் திமுக கழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.