தயாரான திமுக.. தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக பிரசாந்த் கிஷோர் டீமுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறது. திமுக ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தற்போதில் இருந்தே நடைபெற்று வருகிறது. 

இதனிடையே தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து திமுக தலைமை அறிவித்தது. அந்த தேர்தல்அறிக்கை குழுவில் டி ஆர் பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அத்திமூர் செல்வராஜ், ஆ ராசா, கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ராமசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நவம்பர் 3ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் 4 ஆம் தேதி திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

நவம்பர் 5ஆம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டத்திலும், நவம்பர் 6ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து  டி ஆர் பாலு குழுவிடம் மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk election report team to tour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->