அமைச்சரின் வெற்றி செல்லாது என திமுக வழக்கு.! தீர்ப்பை வெளியிட்டது நீதிமன்றம்.!
dmk duraisami case file against admk minister saroja
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜாவும், திமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.துரைசாமியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வி.பி.துரைசாமியை 9,631வாக்குகள் வித்தயாசத்தில் சரோஜா வெற்றி பெற்றார்.
ஆனால், சரோஜா பணபட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி வி.பி.துரைசாமி சரோஜாவின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திவந்த நீதிபதிகள் வழக்கில் சரோஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
English Summary
dmk duraisami case file against admk minister saroja