திமுக மாவட்ட செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
dmk district secretary corona confirmed
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு தேவையான உதவியை செய்ய தமிழக அரசு, சுகாதாரத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. 2,14,815 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 4,461 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். களப்பணியாற்றிய பலருக்கும் கொரோனா அடுத்தடுத்து உறுதியாகி வந்தது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியை சார்ந்த பலருக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது.
இதனிடையே நேற்று பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் பவுன்ராஜ்க்கும், நடிகர் மற்றும் எம்.எல்.ஏ கருணாஸிற்கு கொரோனா உறுதியானது.
அதேபோல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது திருவள்ளூர் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி நாசர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருவள்ளூர் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் சிகிச்சைக்காக சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
English Summary
dmk district secretary corona confirmed