நடுராத்திரி 1 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர் திடீர் கைது! அதிர்ச்சியில் கப்சிப் ஆன திமுகவினர்!
DMK district secretary arrested
ஆரணி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவருமான சிவானந்தம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை சிவானந்தத்தின் மகனுக்கு சீட் வழங்கியிருந்தது.
இந்த தேர்தலில் செலவு செய்ய பணமில்லை என்பதால் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம், காசோலைகள், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை அடமானாக தந்து 5 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருந்தார் சிவானந்தம். அந்த தொகைக்கு சில மாதங்கள் வட்டி செலுத்தி வந்துள்ளார். அதன்பின் வட்டி வழங்கவில்லை என கூறப்படுகிறது.. இதனால் அந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர்.
சிவனானந்தமோ இதோ, அதோ என இழுத்தடித்துள்ளார். அசல் மற்றும் வட்டி என தொகை மொத்தமாக ரூபாய் 8 கோடியாக உயர, பணம் தந்த கரூரை சேர்ந்த முக்கிய பிரமுகர், திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 6- ஆம் தேதி விடியற்காலை 01.30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், அவரை அழைத்து வந்து திருவண்ணாமலையில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
DMK district secretary arrested