தேசத்துரோக வழக்கில்., வைகோ சிறை தண்டனையில் திடீர் மாற்றம்.!
dmk case today judgment vaiko jail confirm by court
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மதிமுகவுக்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியது திமுக. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டை தர திமுக முடிவு செய்து அதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.
Tamil online news Today News in Tamil
இந்தநிலையில், மதிமுகவிற்கு கிடைத்த ராஜ்யசபா சீட்டில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டள்ளது. அந்த சிக்கலுக்கு காரணமும் திமுக வைகோ மீது போட்ட வழக்கு தான்.
முழு செய்திக்கான வீடியோ பதிவு:
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது அப்போது ஆட்சியிலிருந்த திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.
Tamil online news Today News in Tamil
English Summary
dmk case today judgment vaiko jail confirm by court