ராஜ்ய சபா தேர்தலிருந்து பின்வாங்கிய திமுக வேட்பாளர்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக சார்பில் போட்டியிடும், அந்த கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுகவில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்வதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, திமுகவின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று வேட்புமனுக்கு தாக்கல் செய்தார். 

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வைகோ மீதான வழக்கின் காரணமாக அவரின் வேட்புமனு  நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக புதிய முடிவை எடுத்து மாற்று வேட்பாளராக திமுகவின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று வேட்புமனுக்கு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதால் வேட்புமனு ஏற்கப்படுமா என கேள்வி எழுந்தது நிலையில், மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனு தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு வைகோ சார்பில் நன்மாறன் பதிலளித்தார் வைகோ மனு ஏற்கப்பட்டதால் என்.ஆர்.இளங்கோ வாபஸ் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidates withdraws his nomination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->