சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்., கொண்டாட்டத்தில் திமுகவினர்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கடந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த கூட்டத்தில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது அதிகார பூர்வ அறிவிப்பு இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CANDIDATE LIST DATE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->