நிலத்தை அபகரித்து உரிமையாளருக்கு அடி,உதை.! திமுக உடன்பிறப்பினால் கோவையில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியில் 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான மீன்கடை சிவா என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் அந்த இடத்திற்கு சொந்தக்காரர் மாசானமுத்து அண்மையில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் புகார் அளித்ததை அறிந்த மீன் கடை சிவா மற்றும் அவரது அடியாட்கள், மாசானமுத்துவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக உயிருக்கு பயந்து மாசனமுது ஊரை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் மாசனமுத்து கோவை திரும்பியுள்ளார். 

இத்தகைய சூழலில் மாசானமுத்துவை மீன் கடை சிவா மற்றும் அவருடைய அடியாட்கள் ஓட ஓட தாக்கி அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மாசானமுத்து தற்போது தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று அதன் பின், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk admin making violence in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->