சேலத்தில் பரபரப்பு.. இந்தி திணிப்பை எதிர்த்து திமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவருக்கு வயது 85. இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பதவி வகித்துள்ளார்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி மற்றும் இரத்தினவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். திமுக மீது தீவிர பற்று கொண்ட இவர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் திமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை தனது உடல் மீது ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால், அதற்குள் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் தீக்குளிப்பதற்கு முன்பாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். 

அந்த கடிதத்தில் 'மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதற்கு' என குறிப்பிட்டுள்ளார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK admin commits suicide against imposition of Hindi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->