எல் கே சுதீஷ் அவரின் மனைவியை தொடர்ந்து., தேமுதிகவின் முக்கிய புள்ளிக்கு கொரோனா உறுதியானது.! அதிகாரபூர்வ செய்தி.! - Seithipunal
Seithipunal


கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா நோய்த்தொற்று பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அதிகப்படியாக கண்டறியப்பட்டு வருகிறது.

இன்று காலை கூட 20 பள்ளி மாணவர்களுக்கும், 40 கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய்தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக அரசு நோய்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த தொடங்கிவிட்டன. அதிலும், குறிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணை செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளருமான பார்த்தசாரதிக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் தேமுதிகவின் எல் கே சுதீஷ் அவரின் மனைவி ஆகியோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிகவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தேமுதிக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk virukampakkam candidate corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->