#BREAKING : தேமுதிக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி., அதிர்ச்சியில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்துக்கு முன்பாகவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

தற்போது தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், சென்னை, அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன் ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இதுவரை இரண்டு வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK candidate affected corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->