திண்டுக்கல்லின் திமுக வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி! என்னது சிவாஜி செத்துட்டாரா? வாயடைத்து நின்ற பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியின் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுகவைச் சார்ந்த ஜவ்வாது பட்டி வேலுச்சாமி என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த ஜோதிமுத்து என்பவர் போட்டியிடும் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் இந்த தொகுய்தியில் போட்டியிடுகிறார். 

அதிமுகவின் கோட்டை ஆன இந்த தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் எதிரில் பாமக என்பதால் இந்த தொகுதியை காங்கிரசிடமிருந்து கேட்டு பெற்றுள்ளது திமுக. தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று பிரச்சாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் வேலுச்சாமி அங்கே குழுமியிருந்த மக்கள் இடம் கொடுத்த வாக்குறுதியை கேட்டவுடன் மக்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள். 

அவர் பேசும்போது திண்டுக்கல் தொகுதியில் வரும் பழநி கோயில் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளை சுற்றுலா தளமாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதனைக் கேட்ட மக்கள் தான் இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று முணுமுணுத்தவாறு வாயடைத்து போனார்கள். 

ஏனெனில் ஏற்கனவே பழனி மற்றும் கொடைக்கானல் இரண்டு நகரங்களும் தமிழகத்தின் வருமானம் தரும் சுற்றுலா தளங்களாக தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளரின் வாக்குறுதியை பார்க்கும் போது சிவாஜி செத்துட்டாரா? என்ற சினிமா பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது. இந்த அளவிற்கு தொகுதியை பற்றி தெரிந்து வைத்துள்ள திமுக வேட்பாளரை கண்டு பெருமிதம் அடைவதாக மக்கள் பேசி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindigul dmk candidate veluchamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->