போலீஸ் எஸ்எஸ்ஐ எப்படி கொலை செய்யப்பட்டார்? சற்றுமுன் டிஐஜி சரவண சுந்தர் பரபரப்பு பேட்டி.!
DIG Saravana Sundar Press Meet
திருச்சி சரக டிஐஜி சரவணா சுந்தர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
"குற்றவாளிகளை நான்கு படை அமைத்து தேடியதில், மூன்று நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவன் மணிகண்டன், மற்ற இருவரும் சிறார்கள் அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட முடியாது.
இவர்களை கைது செய்து வழக்கு சம்பந்தப்பட்ட சில ஆவணங்கள், சில பொருட்கள், கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை கைப்பற்றி உள்ளோம். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல்கள் மூலமாகவும், சிசிடிவி புட்டேஜ் மூலமாகவும் அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மணிகண்டன் கொடுத்த வாக்குமூலத்தின் படி மூன்று பேருமே சேர்ந்து தாக்கி உள்ளார்கள். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்படி அவரை பின்னாலிருந்து தாக்கி உள்ளார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DIG Saravana Sundar Press Meet