அமமுகவிலும், அதிமுகவில் நடக்கப்போகும் மாற்றம்.! திவாகரன் அதிரடி பேட்டி!! - Seithipunal
Seithipunal


திருச்சியில் அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திவாகரன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, என்னுடைய சகோதரி சசிகலாவை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அவரை வெளியே கொண்டு வருவதற்கான வழிகள் உள்ளனர். ஆனால் அதற்கு அவர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், அமமுக என்பது ஆண்டிகள் கூடி கட்டிய மடம், இப்போது அவர்களே இடித்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு முதலமைச்சர் பழனிச்சாமியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் தான் அமமுகவில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த திவாகரன், கையாலாகாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு இது என்று கூறினார்.

தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் தமிழக அரசியலை. முடியவில்லை என்றால் இப்படி தான் கூறுவார்கள். எனக்கு பணம் கொடுக்க எவனும் இன்னும் பிறந்து வரவில்லை என்றார். மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயமாக நாங்கள் போட்டியிட உள்ளோம் என்றும் திவாகரன் கூறினார்.

டி.டி.வி. தினகரன் ஒருவரை தனிமைப்படுத்தி விட்டால் சிதைந்து கிடக்கின்ற அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhivakaran press meet in ammk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->