நிர்வாகிகளை சந்திக்கும் தினகரன்! வெளியான தலைமை அறிவிப்பு!
Dhinakaran will Meet Kanchipuram district ammk cadres
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையில் 21.07.2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கரிசங்காலில் (படப்பை சாலை) நடைபெற உள்ளது என அமமுக தலைமைக் கழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவத்தையும், மக்கள் நலக் கொள்கைகளையும் இதயத்தில் ஏந்தி, லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் படப்பை சாலை, கரிசங்காலில் உள்ள ஹர்ஷா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Dhinakaran will Meet Kanchipuram district ammk cadres