ஓபிஎஸ் மகனும், திமுக எம்பியும் சேர்ந்து செய்த செயல்.!! டெல்லியில் நடந்த ருசிகர சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த மே 23ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் தனது ஆட்சியை நிலை நாட்டியது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வேலூர் தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி தொகுதியில் தேர்வு பெற்றார். 

இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. சபாநாயகர் முன்னிலையில் வரிசையாக திமுக எம்பிக்கள் அவரவர் பகுதிகளில் எம்பியாக பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து பதவி ஏற்கும் திமுக எம்பி களின் மத்தியில், அதிமுக எம்பியாக ரவீந்திரநாத் குமார் ஒருவர் மட்டும் உறுதிமொழி ஏற்று பதவியேற்றார். அவர் பதவி ஏற்று திரும்பிய பொழுது, முன்னதாக அமர்ந்திருந்த திமுக எம்பி தயாநிதிமாறன் எதிர்கட்சி என்றும் பாராமல் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவரது வார்த்தையை பெற்ற ரவீந்திரநாத் குமார் பதிலுக்கு கைகுலுக்கி வணக்கம் செலுத்தி மரியாதை நிமித்தமாக பார்த்து சிரித்தார். இது பதவியேற்பு விழாவில் ருசிகரத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhayanithimaran wishes to ops son


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->