#BigBreaking: டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் வெளியான உத்தரவு.!
DGP rajesh doss case
காவல்துறையில் உயர் பதவியில் உள்ள ஒரு பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டால் அது குறித்து விசாரணை செய்ய விசாக கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ஐஏஎஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. புகாருக்கு உள்ளான அவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த அதிரடியாக, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு விசரனை சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது.