மக்களுக்கு துரோகம்.. பாஜகவிற்கு துரோகம்.. சொர்க்கத்தில் கண்ணீர்..! தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு.!!
devendra fadnavis speech about shiv sena activity
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தில் சுமார் 8 மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதியன்று நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்., பாஜக சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய சமயத்தில்., மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மக்கள் அனைவரும் பாஜக - சிவசேனா ஆட்சியமைக்க வாக்குகளை வழங்கினார். பாஜக போட்டியிட்ட 70 விழுக்காடு தொகுதியில் வெற்றியைப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சிவசேனா கட்சி போட்டியிட்ட 45 விழுக்காடு தகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில்., துரதிஷ்டவசமாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் செய்துவிட்டது.
இந்த துரோகம் வாக்களித்த மக்களுக்கும்., பாரதிய ஜனதா கட்சிக்கும் சிவசேனாவால் இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்துத்துவா கொல்கியின் சித்தாந்தவாதி வீரர் சாவர்க்கரை அவமதிக்கும் நபர்களுடன் சிவசேனா சமரசம் செய்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா கூட்டணி அமைத்ததை அறிந்தால் பால் தாக்கரே சொர்க்கத்தில் இப்போது அழுதுகொண்டு இருப்பார். மந்திரிகளை தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்குள் குழப்படி இருந்து வருகிறது. என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
devendra fadnavis speech about shiv sena activity