சிவகங்கை உமர் பாரூக் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!
devakottai umar farug murder case
தேவகோட்டை அருகே இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், திருடிய பொருட்களை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை புது தெருவை சேர்ந்த உமர் பாரூக் என்பவர், நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், உமர் பரூக் மணல் கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்ற போது, கைதிகள் பலருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
திருடிய பொருட்களை பங்கிடுவதில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில், இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரபூர்வ செய்தி வெளியாகவில்லை.
English Summary
devakottai umar farug murder case