புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பாமக மாநில தலைவர்! யாரும் செய்யாததை செய்து முடித்த பாமக !!
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பாமக மாநில தலைவர்! யாரும் செய்யாததை செய்து முடித்த பாமக !!
கஜா புயல் காரணமாக நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்துளளது. கஜா புயலுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசும் போதிய நிவாரணம் வழங்கவில்லை. அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மக்கள் புகார் எழுப்புகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பாமக சார்பாக புயல் பாதித்த பகுதிகளில் தென்னம்பிள்ளைகள் வழங்கும் திட்டத்தை பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார்.
பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேற்று பார்வையிட்டார். பின் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
English Summary
Delta in affected areas when visiting PMK President